Friday 29th of March 2024 06:59:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவைக்  கட்டுப்படுத்துவதில்  தடுப்பூசிகள் திறம்பட செயற்படுவதாக பிரிட்டன் தெரிவிப்பு!

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் திறம்பட செயற்படுவதாக பிரிட்டன் தெரிவிப்பு!


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் திறம்பட செயற்படுவது நிரூபிக்கப்பட்டு வருவதாக பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கண்காணித்து வரும் அமைச்சர் நாதிம் ஜஹாவி இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

கோவிட்19 கட்டுப்பாடுகளை மெல்லத் தளர்த்தும் பாதையில் பிரித்தானியா நகர்வதாக அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் நாதிம் ஜஹாவி இவ்வாறு கூறியுள்ளார்.

கோவிட்19 தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் தொற்று நோய் பாதிப்பு மற்றும் மருத்துவமனைச் சோ்க்கைகள் குறைந்துள்ளனவா? என இன்று அமைச்சர் நாதிம் ஜஹாவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதே நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இதே முன்னேற்றம் தொடர்ந்தால் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட அடுத்த கட்டத்தை நோக்கி நாங்கள் நகர முடியும் எனவும் பிரித்தானியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கண்காணித்து வரும் அமைச்சர் நாதிம் ஜஹாவி தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE