Thursday 28th of March 2024 08:39:28 AM GMT

LANGUAGE - TAMIL
-
பூநகரி மத்தியகல்லூரியின் மற்றுமொரு ஆசிரியைக்கும் கொரோனா!

பூநகரி மத்தியகல்லூரியின் மற்றுமொரு ஆசிரியைக்கும் கொரோனா!


கிளிநொச்சி மாவட்டம் பூநகரி மத்தியகல்லூரியில் கற்பிக்கும் மற்றுமொரு ஆசிரியைக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அருவிக்குத் தெரிவித்தார்.

இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனிடையே பூநகரி மத்தியகல்லூரியில் கற்பிக்கும் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கடந்தவாரம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இன்று அடையாளம் காணப்பட்ட ஆசிரியை அவருடன் நெருங்கிப் பழகியவர் என்று தெரியவந்துள்ளதாக கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே இன்று தொற்றுக்குள்ளான ஆசிரியை பூநகரி வலைப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவருகிறது.

ஏற்கனவே வலைப்பாடு கிராமத்தினைச் சேர்ந்த பலர் தொற்றாளர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE