வவுனியா கோமரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பூங்கா மற்றும்,ஆயுள்வேத வைத்தியசாலை என்பன பிரதேச சபையால் மறுசீரமைக்கப்படவுள்ளது.
வவுனியா தெற்கு தமிழ் பி்ரதேச சபையினால் கோமரசங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொதுப்பூங்கா நீண்ட காலமாக பயன்பாடற்றநிலையில் காணப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் இருந்த பெறுமதியான உபகரணங்கள் திருடிச்செல்லப்பட்டும் இருந்தது.
இந்நிலையில் குறித்த பூங்காவை சீரமைத்து பொழுதை கழிக்கக்கூடிய ஒரு பகுதியாக மாற்றம்செய்வதுடன் அதன் ஒரு பகுதியில் செயற்பட்டுவரும் ஆயுள்வேத வைத்தியசாலையையும் புணரமைப்பதற்கான நடவடிக்கைகள் தெற்குதமிழ் பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒருமில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த பகுதியில் துப்புரவுபணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது,பிரதேசசபை தவிசாளர் து.நடராயசிங்கம், செயலாளர் சுகந்தி கிசோர்,பிரதேச சபை உறுப்பினர்களான உத்தரியநாதன் மற்றும் கார்த்தி,சபை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா