திருகோணமலையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இன்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திருமலை சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மரணம் நிகழ்ந்திருப்பதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை