Saturday 20th of April 2024 08:21:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு !

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு !


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் ஹரிகுப்தா ரோஹணாதீர இந்த அறிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்றத்தின் செயலாளரும் கலந்துகொண்டார்.

இதேநேரம், இந்த அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும், அறிக்கையின் பிரதியொன்று நாடாளுமன்ற வாசிகசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவற்றைப் பார்வையிடவும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் இறுதி அறிக்கையின் ஆங்கில மற்றும் சிங்கள பிரதிகள் நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE