Friday 19th of April 2024 01:35:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் எச்சரிக்கை!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் எச்சரிக்கை!


ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இன்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பிரமுகரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். "அவ்வப்போது இவ்வாறான தகவல்கள் கிடைக்கும். அவை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தேவையான தகவல்கள் உரிய வகையில் வெளியிடப்படும். சில தகவல்களை வெளிப்படையாகக் குறிப்பிடமுடியாது. ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை இடம்பெறும்" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE