Friday 19th of April 2024 12:07:56 PM GMT

LANGUAGE - TAMIL
.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்தார்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்தார்!


இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில் வருகைதந்துள்ள இம்ரான் கான் இன்று மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவ்வாறு வருகைதந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச நேரில் சென்று உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.

இதன்போது அவருக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கான விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளதுடன் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளனர்.

இதேவேளை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE