Friday 19th of April 2024 05:35:50 PM GMT

LANGUAGE - TAMIL
-
கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு திரும்பிய கனேடியர்களின் எண்ணிக்கை டிசம்பரில் அதிகரிப்பு!

கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு திரும்பிய கனேடியர்களின் எண்ணிக்கை டிசம்பரில் அதிகரிப்பு!


கனடாவில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தபோதும் கடந்த ஆண்டு டிசம்பரில் அதிகளவான கனேடியர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக கனடா புள்ளிவிபரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, கடந்த டிசம்பரில் 170,700-க்கும் மேற்பட்ட கனேடியர்கள் வெளிநாட்டிலிருந்து விமானங்களில் நாடு திரும்பியுள்ளனர்.

இது 2020 நவம்பரிலிருந்து 33.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிபரத்துறை தெரிவித்துள்ளது.

எனினும் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டு அதே மாதத்தில் 93 சதவீதம் குறைந்துவிட்டதாகவும் கனடா புள்ளிவிபரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் கனடாவுக்குள் வந்த அமெரிக்கர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது எனவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 62,500 கனேடியர்கள் விமானம் மூலம் நாட்டுக்குள் வந்துள்ளனர். இது 2020 நவம்பரிலிருந்து 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்தவர்களில் 76.1 வீதம் பேர் கனேடியர்கள் மற்றும் கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றவர்களாவர். 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 77.8 வீதம் குறைந்துள்ளது.

ஏப்ரல் 2020 முதல் கனடாவுக்கு பயணம் செய்பவர்களின் தொகை படிப்படியாக உயர்ந்தபோதிலும் முன்னைய ஆண்டை விட அந்த எண்ணிக்கைகள் குறைவானவையே எனவும் கனடா புள்ளிவிபரத்துறை தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE