நாடளாவிய ரீதியில் சுகாதார சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் ஒழுகிய மாவட்டத்திலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சுகாதார சிற்றூழியர்கள் கடமைகளை புறக்கணித்துள்ளனர்.
மாவட்ட வைத்தியசாலைக்கு என்று வெளிநோயாளர் பிரிவுக்கு வருகைதந்த நோயாளர்கள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர். மாதாந்த கிளினிக் சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்றது. இதன் காரணமாக பல கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து வந்த நோயாளர்கள் பலர் சிரமங்களை எதிர்நோக்கினர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு