சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுர் சிறையில் இருந்த சசிகலா நடராஜன் விடுதலை பெற்று தமிழ்நாடு திரும்பியிருந்த நிலையில் இன்று அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் விரிசையாக சந்தித்து வருவதனால் தமிழ்நாடு அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் சென்னை தி.நகர் இல்லத்திற்கு, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சென்று தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர்.
சிறையில் இருந்து விடுதலையான பின்னர் இன்றே உத்தியோகபூர்வமாக சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த அடிப்பயைடில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா, இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து மேலும் பல அரசியல், சினிமா பிரபலங்கள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சசிகலாவை சுற்றி ஆதரவு நிலை ஏற்பட்டு வருகின்றமை அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.