ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு அடிப்படையில் சமுர்த்தி வங்கிகளை கணிணி மயப்படுத்தி மக்கள் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சமுர்த்தி வங்கிகள் கணிணி மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தில் உள்ள சமுர்த்தி வங்கி கணிணி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவை அங்குராப்பணம் செய்துவைக்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ.ராகுலநாகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் , விசேடஅதிதீயாக மாவட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராசா,போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பழுகாம சமுர்த்தி வங்கி கணிணி மயப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன் வலையமைப்பு ஊடாக பொதுமக்களுக்கான சேவைகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன. இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு