யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு ஆசிரி வைத்தியசாலைக்கு சென்ற நபர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருத்துவம் பார்த்ததாக அந்த நோயாளி தெரிவித்திருக்கின்றார்.
சம்பவத்தை அடுத்து தனியார் வைத்தியசாலையில் குறித்த நோயாளிக்கு மருத்துவம் பார்த்த தெல்லிப்பளை வைத்தியசாலை வைத்தியர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்.
இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட நபர் ஒருவருக்கும் இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் மத போதனையில் ஈடுபவர் என்றும் நானாட்டான், மிருசுவில், பருதித்துறையில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் என்றும் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்