கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.
குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தகவலை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வெளியிட்டதாகவும் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடருக்கான ஆதரவு கோரி சர்வதேச நாடுகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுக்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை