Thursday 25th of April 2024 07:41:08 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையில் முதலாவது தாதியை பலியெடுத்தது கொரோனா!

இலங்கையில் முதலாவது தாதியை பலியெடுத்தது கொரோனா!


கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பியந்தி ரம்யா குமாரி என்ற தாதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டி தாதியர் பயிற்சிக் கல்லூரியில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த குறித்த தாதி, 2001ஆம் ஆண்டு முதல் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த முதலாவது தாதி இவராவார் என அரச தாதியர் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 81ஆயிரத்து 933 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில், இன்னும் 3 ஆயிரத்து 849 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 459ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE