சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று மேலும் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையி சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் மேலும் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 4 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை