Wednesday 17th of April 2024 09:42:56 PM GMT

LANGUAGE - TAMIL
.
நான்கு மணிநேர பொலிஸ் சுற்றிவளைப்பு: 3,871 சந்தேக நபர்கள் கைது!

நான்கு மணிநேர பொலிஸ் சுற்றிவளைப்பு: 3,871 சந்தேக நபர்கள் கைது!


நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட நான்கு மணி நேர சுற்றிவளைப்பின்போது 3 ஆயிரத்து 871 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும், 6 ஆயிரத்து 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய கடந்த 25ஆம் திகதி மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 18 ஆயிரத்து 357 பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,108 பேரும் துப்பாக்கிகளை வைத்திருந்த 16 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,430 பேரும், பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 562 பேரும் கைதாகியுள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையின்போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 607 சாரதிகள் உள்ளடங்கலாக போக்குவரத்து விதிகளை மீறிமை தொடர்பில் 6 ஆயிரத்து 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE