இலங்கையில் மேலும் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை