சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்குச் சென்றபோது குறித்த ஆசிரியைக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியையின் கணவர் கொழும்பில் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தராக பணியாற்றுவதாகவும் அவர் கொழும்பிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணம் வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்