கொரோனாத் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்திருந்த இளம் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
களுத்துறை மாவட்டம் பேருவளை பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றி வந்த ருசித பண்டார என்ற இளைஞரே கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்று பரம்பலுக்கு எதிரான செயற்பாட்டில் இரவு, பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த குறித்த இளம் பொதுச் சுகாதார பரிசோதகர் கொரோனாவுக்கே பலியாகியுள்ளமை அவர் கடமையாற்றிய பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை