மாகாண சபைக்களுக்கான தோ்தலை எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தோ்தலை நடத்துவது குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை புதன்கிழமை சந்தித்து ஜனாதிபதி பேசவுள்ளதாக சண்டே ரைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோவிட்19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் மாகாண சபைத் தோ்தல்களை விரைவாக நடத்துவது சாத்தியமில்லை என ஆளும் கட்சியான பொதுஜன பெரமுன முன்னர் கருத்து வெளியிட்டிருந்தபோதும் தோ்தலை நடத்த ஜனாதிபதி தீா்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் 2018 முதல் பல்வேறு கட்டங்களில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து தற்போது அனைத்து மாகாண சபைகளும் ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை