Tuesday 23rd of April 2024 06:04:07 AM GMT

LANGUAGE - TAMIL
-
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பயணித்த கப்பல் கப்டன் காலமானார்!

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பயணித்த கப்பல் கப்டன் காலமானார்!


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டு பயணித்த கப்பலில் கப்பலின் கப்டன் வல்வெட்டித்துறையில் இன்று காலமானார்.

1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புலம்பெயர் தேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த தளபதி கிட்டுவும் 09 போராளிகளும் தாயகம் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்ய முற்பட்டது.

அதன் போது போராளிகள் கப்பலை தகர்த்து தங்கள் உயிர்களை அழித்தனர்.

சம்பவத்தின் போது கப்பலின் கப்டனை கடலில் குதிக்குமாறு போராளிகள் கேட்டுக்கொண்டதால் அவர் கடலில் குதித்த நிலையில் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பின்னர் இந்திய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்த அவர் இலங்கை திரும்பி வல்வெட்டித்துறையில் வசித்து வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE