வாரியபொல – கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸ் வாகனமும், ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது எனபொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.