இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திங்கட்கிழமை காலை தனது முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இன்று எய்ம்ஸ் (AIIMS Hospital) மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட படத்தை தனது ருவிட்டரில் பகிர்ந்துள்ள இந்தியப் பிரதமர், கோவிட்19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் விரைந்து பணியாற்றிய இந்திய மருத்துவர்கள் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடியவர்கள் அனைவரும் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் கோவிட் தொற்று நோயில் இருந்து விடுபட்ட இந்தியாவை உருவாக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா