தான் தனிக் கட்சி தொடங்க இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு பின்னர் முதல் தடவையான தலைநகர் வொஷிங்டனில் பொது மேடையில் நேற்று பேசிய ட்ரம்ப், மாற்றங்களை ஏற்படுத்துவதாக கூறி கொண்டு ஜனாதிபதிக்குரிய கடமைகளை ஜோ பைடன் மீறி வருவதாக குற்றம் சாட்டினார்.
மீண்டும் அமெரிக்கா முன்னணியில் என்ற தனது கொள்கைக்குப் பதிலான அமெரிக்காவை பின்னணிக்குக் கொண்டு செல்லும் வகையிலேயே பைடனின் செயற்பாடுகள் அமைவதாகவும் அவா் தெரிவித்தார்.