Thursday 28th of March 2024 06:40:42 PM GMT

LANGUAGE - TAMIL
-
30.25 மில்லியன் தொகையில் 392 கொடுப்பனவுகள் கிளிநொச்சியில் வழங்கி வைப்பு!

30.25 மில்லியன் தொகையில் 392 கொடுப்பனவுகள் கிளிநொச்சியில் வழங்கி வைப்பு!


நிதி அமைச்சின் அமைந்துள்ள இழப்பீடுகளிற்கான அலுவலகத்தின் மூலமாக இழப்பீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு இழப்பீட்டு காசோலைகளை வழங்கி வைத்தார்.

இன்றைய தினம்,30.25 மில்லியன் தொகையில் 392 கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் தெரிவிக்கின்றது.

அதற்கு அமைவாக பொதுமக்கள் சொத்து இழப்பிற்காக 350 பேருக்கும், அரச ஊழியர் இழப்புக்காக 25 பேருக்கும், காயம் மற்றும் இறப்புகளிற்கான தொகை 08 பேருக்கும், சேதமடைந்த கோவில்களிற்கான இழப்பீடடு தொகைகள் 09 கோவில்களிற்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் இழப்புக்களை சந்தித்தவர்கள் எனும் அடிப்படையில் பொதுமக்கள் சொத்து இழப்புக்களிற்காக 9690 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும், அதில் 5488 பேருக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் 4202 பேரால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று அரச ஊழியர்களால் 1590 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் 1448 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

காயம் மற்றும் இறப்பு ஆகியவற்றுக்காக 5155 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதில் 4649 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சேதமடைந்த கோவில்கள் தொடர்பில் 68 விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் அவற்றில் 55 கோவில்களிற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE