Thursday 25th of April 2024 12:53:45 AM GMT

LANGUAGE - TAMIL
-
குடாநாட்டில் எண்மர் உள்ளடங்கலாக வடக்கில் 09 பேருக்கு கொரோனா! (திருத்தம்)

குடாநாட்டில் எண்மர் உள்ளடங்கலாக வடக்கில் 09 பேருக்கு கொரோனா! (திருத்தம்)


யாழ்.மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 292 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 411 பேருக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 09 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் காதார வைத்திய அதிகாரி பிரிவுக்குள் வசிக்கும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 4 நாட்களுக்கு முன்னர் சண்டிலிப்பாயில் அடையாளம் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஆசிரியை ஆகியோரோடு தொடர்பிலிருந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை,

கொடிகாமம் சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வியாபாரி ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த இருவர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் நுவரெலியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE