Thursday 28th of March 2024 09:35:53 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியாவில் 4245 ஏக்கர் அரச காடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவிப்பு!

வவுனியாவில் 4245 ஏக்கர் அரச காடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவிப்பு!


வவுனியா பி்ரதேசத்திற்குட்பட்ட 4245ஏக்கர் அரசகாடுகள் விடுவிக்கப்படவுள்ளதாக வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா பிரதேசசெயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 4245 ஏக்கர் ஏனைய அரசகாடுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வனவளத்திணைக்களம் சார்பாக முன்னிலையாகிருந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்ததுடன் இது தொடர்பாக மாவட்ட அரசஅதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் குறித்தவிடயம் தொடர்பாக பிரதேச செயலகத்திற்கோ அல்லது கிராமசேவையாளர்களிற்கோ அறிவிக்கப்படவில்லை.

இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு. திலீபன் நாங்கள் மக்களுடன் சந்திப்பை மேற்கொள்பவர்கள். அவர்களிற்கு பதில் சொல்லவேண்டும். எனவே அரச அதிபருக்கு தெரியப்படுத்துவதற்கு முன்னதாக எங்களுக்கும் அது தொடர்பாக தெரியப்படுத்தி ஒரு பிரதியை அனுப்புமாறு தெரிவித்திருந்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE