ஒன்ராறியோவில் கொரோனா தொற்று நோயாளர் தொகை நேற்று 1,000-க்கு குறைவாகப் பதிவாகியது. மொத்தம் 966 புதிய தொற்று நோயாளர்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டனர்.
தொடர்ச்சியாக ஆயிரத்துக்கு அதிகமான தொற்று நோயாளர்கள் மாகாணத்தில் உறுதிப்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று குறிப்பிடத்தக்க இந்த வீழ்ச்சி பதிவானது.
இவற்றுடன், ஒன்ராறியோவில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 302,805 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 285,262 பேர் குணமடைந்துள்ளனர். 6,997 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மாகாணத்தில் நேற்று 11 கொரோனா மரணங்கள் பதிவாகின. ஒன்ராறியோவில் செவ்வாய்க்கிழமை பதிவான புதிய கோவிட்19 தொற்று நோயாளர்களில் 253 பேர் ரொரண்டோவைச் சேர்ந்தவர்களாவர்.
அத்துடன் பீல் பிராந்தியத்தில் - 223, யார்க் பிராந்தியத்தில்- 99 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.