கோவிட்19 தொற்று நோய் நெருக்கடியை அடுத்து அவுஸ்திரேலியா - சீனா இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சீன-அவுஸ்திரேலியர்களில் ஐந்தில் ஒருவர் தாங்கள் அச்சுறுத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
லோவி நிறுவனத்தின் திங்க் டாங் (think tank) ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீன-அவுஸ்திரேலிய மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 5% பேர் சீன வம்சாவளியைச் சோ்ந்தவர்கள் என தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் அரைவாசிப் பேர் சீனாவின் பிரதான பகுதிக்கு வெளியே, ஹொங்ஹொங், மலேசியா மற்றும் தாய்வான் உள்ளிட்ட இடங்களில் பிறந்தவர்களர் என ஆய்வுக் குழுவான திங்க் டாங் தெரிவித்துள்ளது.
சீன-அவுஸ்திரேலியர்கள் எப்போதுமே சீனா-அவுஸ்திரேலியா இடையிலான புவிசார் அரசியல் பதட்டங்களில் சிக்கித் தவிக்கும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாக சீன-அவுஸ்திரேலிய மன்றத்தின் தலைவர் ஜேசன் லி தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா