Thursday 25th of April 2024 11:36:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
அடக்கத்துக்கு எதிரான மகஜரை ஏற்க மறுத்தது பூநகரி பிரதேச சபை!

அடக்கத்துக்கு எதிரான மகஜரை ஏற்க மறுத்தது பூநகரி பிரதேச சபை!


இரணைதீவில் கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வழங்கப்பட்ட மகஜரை பூநகரி பிரதேச சபை ஏற்க மறுத்துள்ளது.

இரணைதீவில் சடலங்களைப் புதைப்பது தொடர்பில் மீள் பரிசீலணை செய்யுமாறு வலியுறுத்தி மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனம், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இரணைதீவு மக்கள் இணைந்து அரச திணைக்களங்கள் உள்ளிட்ட முக்கிய தரப்பினருக்கு மகஜர்களை வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று பூநகரி பிரதேச சபையினருக்கு குறித்த மகஜரை வழங்குவதற்காகச் சென்ற நிலையில் மகஜரை ஏற்றுக்கொள்வதற்குப் பிரதேச சபையினர் முன்வரவில்லை.

எனினும், பொறுப்பு வாய்ந்த தரப்பினரான பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் மறுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

இதேவேளை, முக்கிய பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் பிரதேச சபையானது பொதுமக்கள் விடயம் சார்ந்து பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்று மக்கள் கவலை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE