தற்போது நாடாளாவியரீதியில் நடைபெற்று வந்த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய நபரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
02 03 2021 அன்று தமிழ் பாடத்திற்கு முல்லைத்தீவு சிலாவத்தை பாடசாலை பரீட்சைகள் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணுக்கேணி மேற்கு முள்ளியவளையினை சேர்ந்த பரீட்சை எழுதும் மாணவனுக்கு பதிலாக நெடுங்கேணி வவுனியாவினை சேர்ந்த 28 அகவையுடைய மாணன் ஒருவன் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுத சென்றவேளை பரீட்சைநிலைய அதிகாரியால் அடையாளம் காணபட்டு முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் இன்று 03 03 2021 அன்று கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் பட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு