Thursday 28th of March 2024 10:56:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஏழை விவசாயிகளைப் புறக்கணிக்கும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை நிர்வாகம்!

ஏழை விவசாயிகளைப் புறக்கணிக்கும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை நிர்வாகம்!


வவுனியாவில் உள்ள அரச விதை உற்பத்திப் பண்ணையில் விதை தானியங்களை சுத்திகரித்து வழங்கும் நடவடிக்கையில் ஏழை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு மொத்த உற்பத்தியாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக விவசாயிகள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் விதை தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டும் வழங்கப்படுவது வழக்கம்.

தற்போது சிறுபோக செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களிடமுள்ள விதை நெல்லை சுத்திகரிப்பு செய்ய பண்ணைக்கு சென்றால் அங்கு பணிபுரிபவர்கள் பொறுப்பற்ற பதிலை சொல்லி திருப்பி அனுப்பப்படுவதாக சிறிய அளவிலான விவசாயச் செய்கைகளில் ஈடுபடுகின்ற விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரே இன நெல்லையே தம்மால் தொடர்சியாக சுத்திகரிப்பு செய்ய முடியும் என்றும் வெவ்வேறு இனங்கள் ஆயின் அந்தந்த இனங்கள் பல ஆயிரம் கிலோ வரை சேர்ந்தில் மட்டுமே சுத்திகரிப்பு செய்ய முடியும் என்றும் அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என தாம் திருப்பி அனுப்பப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் உளுந்து செய்கையாளர் ஒருவர் இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை இவ்வாறு பதிவுசெய்தார்.

நான் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன். இம்முறை உளுந்து பயிரிட்டேன். மழை காரணமாக அவை சரியான விளைச்சலை தரவில்லை. 150 கிலோ வரை அறுவடை செய்ய முடிந்து. அதுவும் தரமான உளுந்தாக வரவில்லை.

அந்த உழுந்தை சுத்தம் செய்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இப்படி பல தடவைகள் பண்ணையில் சுத்தம் செய்து விற்பனை செய்திருக்கிறேன். இம்முறை உழுந்தை சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றபேது வாயில் பாதுகுப்பு உத்தியோகத்தர் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

முகாமையாளரிடம் அனுமதி பெற்று அவரால் குறிப்பிடப்படும் தினத்தில் கொண்டு வந்துதான் சுத்தம் செய்யலாம் என்றனர்.

உழுந்தை உள்ளே கொண்டு செல்ல அவர் அனுமதிக்கவில்லை. குறித்த உழுந்தை வாடகை வாகனத்தில் ஏற்றிவந்து மீள வீட்டுக்கு கொண்டு செல்ல 3000 ரூபா செலவானது என்றார்.

விதை நெல் சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்ற பலரும் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

தம்மிடம் பல ஆயிரம் கிலோ தானியங்கள் இல்லை. விதை தேவைக்காக சுத்திகரிப்பு செய்ய கொண்டு சென்றால் பல ஆயிரம் கிலோ சேர்ந்தால் தான் சுத்தம் செய்ய முடியும் என்றால் சிறுபோக விதைப்பை பெரும்போகத்தில்தான் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த விதை உற்பத்தி நிலையத்தில் சில வருடங்களுக்கு முகாமையாளராக பணியாற்றிய ஒருவர் பல இலட்சம் ரூபா வரையிலான மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்ற போதிலும், அரசியல் தலையீடுகள், அதிகார இழுபறிகள் காரணமாக குறித்த பண்ணை நிர்வாகத்தில் தொடர்ந்தும் இவ்வாறான மக்களுக்கு விரோதச் செயற்பாடுகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE