Wednesday 24th of April 2024 07:46:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 3 பெண் ஊடகப் பணியாளர்கள் சுட்டுக் கொலை!

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 3 பெண் ஊடகப் பணியாளர்கள் சுட்டுக் கொலை!


கிழக்கு ஆப்கானிஸ்தானில் மூன்று பெண் ஊடகப் பணியாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்தப் படுகொலைகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இன்று பொறுப்பேற்றுள்ளது.

கிழக்கு நகரமான ஜலாலாபாத்தில் உள்ள எனிகாஸ் தொலைக்காட்சி நிலையத்தின் பணியாற்றும் 3 பெண் பணியாளர்கள் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

18 முதல் 20 வயதுக்கு உட்பட்ட 3 பணியாளர்களும் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட 3 பெண் ஊடகப் பணியாளர்களின் இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை நடைபெற்றன.

இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த நான்காவது பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE