அரசியலில் இருந்து ஒதுங்குவதாக ஜெயலலிதாவின் தோழியாகிய சசிகலா அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டுமெனவும் அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார் சசிகலா.
"நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை" என்று சசிகலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.