மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவருக்கு கொவிட்19 தொற்றுறுதியானதை அடுத்து முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொவிட்19 நிமோனியா நிலை மற்றும் குருதி விஷமானமை இந்த மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொவிட்19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 484 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு