அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 60 முதல் 64 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயன்படுத்த ஒன்ராறியோ மாகாண அரசு திட்டமிட்டுள்ளது. அத்துடன், காலாவதி திகதிக்கு முன்னர் இந்த தடுப்பூசியை பயன்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகளில் சுகாதாரத் துறை சார்ந்த வேவ்வேறு தரப்பினரையும் ஈடுபடுத்தவும் மாகாணம் திட்டமிட்டுள்ளது. கனடாவில் இந்த மாதம் அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகாவின் 190,000 தடுப்பூசிகள் ஒன்ராறியோவுக்கு கிடைக்கவுள்ளன. இதில் சுமார் 114,000 தடுப்பூசிகள் ஏப்ரல் 2-ஆம் திகதி காலாவதியாகின்றன.
இந்நிலையில் மாகாணத்தின் 34 பொது சுகாதார பிரிவுகளுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தடுப்பூசியை விநியோகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பெறவுள்ள அனைத்து தடுப்பூசிகளையும் சேதாரங்கள் இன்றி பயன்படுத்துவதற்கான வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு்ள்ளன என நேற்று குயின்ஸ் பார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய சில்வியா ஜோன்ஸ் கூறினார்.