தமிழகம் - நாமக்கல் மாவட்டத்தில் பழமையான வீட்டை இடித்து அகற்ற முற்பட்டபோது சுவர் இடிந்து விழுந்து இரண்டு வயதுக் குழந்தை ஒன்று உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வீட்டின் ஓடுகளை அகற்றிவிட்டு சுவரை இடிக்க முற்பட்டபோது திடீரென மண் சுவர் சரிந்து விழுந்தது.
இதன்போது அங்கு வீடு இடிப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் மீது சுவர் விழுந்ததில் சம்பவ இடத்தில் அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து நாமக்கல் - நல்லிபாளையம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.