Friday 29th of March 2024 07:18:13 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாமக்கல்லில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உட்பட மூவர் பலி!

நாமக்கல்லில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து குழந்தை உட்பட மூவர் பலி!


தமிழகம் - நாமக்கல் மாவட்டத்தில் பழமையான வீட்டை இடித்து அகற்ற முற்பட்டபோது சுவர் இடிந்து விழுந்து இரண்டு வயதுக் குழந்தை ஒன்று உட்பட மூவர் பலியாகியுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் வீட்டின் ஓடுகளை அகற்றிவிட்டு சுவரை இடிக்க முற்பட்டபோது திடீரென மண் சுவர் சரிந்து விழுந்தது.

இதன்போது அங்கு வீடு இடிப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றவர்கள் மீது சுவர் விழுந்ததில் சம்பவ இடத்தில் அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து நாமக்கல் - நல்லிபாளையம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE