Tuesday 16th of April 2024 12:32:56 PM GMT

LANGUAGE - TAMIL
-
கைத்தொழில் பேட்டை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

கைத்தொழில் பேட்டை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!


கிளிநொச்சி கண்டாவளை நாகேந்திரம் பகுதியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கைத்தொழில் பேட்டை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பெண்களுக்கான பொருளாதாரத்தை வலுவூட்டும் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட நாகேந்திரம் கிராமத்தில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சிகளை ஊக்குவித்தல் என்ற திட்டத்தின் கீழ் 20 பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு மேற்படி கைத்தொழில் பேட்டை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த கூடிய வகையிலும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் குறித்த திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று பகல் 12 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறித்த கட்டத்தினை திறந்து வைத்துள்ளார். இதில் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினர் போரூட் நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE