யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கல்விபயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில் அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), யாழ்ப்பாணம்