நியூசிலாந்தில் சற்று முன்னதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னதாக நியூசிலாந்து உள்ளுர் நேரம் வெள்ளிக்கிழமை அதிகாலை பொழுதில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்தின் வடக்கு தீவுக்கு கிழக்கே 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கத்தின் மையத்தில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுனாமி அலையின் தாக்கம் காணப்படலாம் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து