இலங்கையில் இன்று மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகின. இவற்றுடன் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் 489-ஆக அதிகரித்துள்ளன.
உஸ்ஸாபிட்டிய, கிரிஉல்ல, கொலன்னாவை, மட்டக்குளி, பொரலஸ்கமுவ பகுதிகளைச் சேர்ந்த 53, 78, 72, 62, 70 வயதுகளையுடைய 1 ஆண் மற்றும் 4 பெண்களே உயிரிழந்ததாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று மேலும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்களுடன் நாட்டில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் தொகை 84,577 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 399 பேர் இன்று குணமடைந்த நிலையில் தொற்று நோயில் இருந்து குணமடைந்தவர்களின் தொகை 80,836 -ஆகப் பதிவாகியுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை