நியூசிலாந்தில் நேற்று 8.1 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை இன்று விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் நேற்று அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மூன்றாவது மற்றும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் வடக்கு தீவின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. கிழக்கு கடற்கரையில் சுனாமி அச்சுறுத்தல் இருப்பதாக தேசிய அவசர நிறுவனம் எச்சரித்தது.
இதனையடுத்து சில நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அவசரமாக வெளியேற முயன்றதால் குழப்பம் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன.
எனினும் மிகப்பெரிய அலைகள் கடந்துவிட்டன. சுனாமி ஆபத்து நீங்கியுள்ளதாக நியூசிலாந்து அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
தமது பகுதிகளில் இருந்து வெளியேறிய குடியிருப்பாளர்கள் வீடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து