வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படுபவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வு கூடங்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 761 பேரின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு வடமாகாணத்தைச் சேர்ந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் வெளியிடப்படும் நாளாந்த பரிசோதனை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
இன்றைய தினம் (மார்ச்-05) வடமாகாணத்தில் இருந்து பெறப்பட்டிருந்த 761 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.யாழ் மாவட்டத்தில் 08 பேருக்கம் மன்னார் மாவட்டத்தில் 12 பேருக்கும் என வட மாகாணத்தைச் சேர்ந்த 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்கள் குறித்த விரிவான விபரங்கள் விரைவில்...
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், மன்னார்