இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இன்று நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
கேகாலையைச் சேர்ந்த 39 வயது ஆண், கொழும்பு - 08 ஐச் சேர்ந்த 67 வயது ஆண், கொழும்பு - 10 ஐச் சேர்ந்த 81 வயது ஆண் மற்றும் இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 84 வயது பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19)