பைசர்-பயோஎன்டெக் 15 இலட்சம் தடுப்பூசிகள் இந்த மாதத்துக்குள் கனடாவுக்கு வந்து சேரும் என கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மே மாதத்தில் மேலும் 2 மில்லியன் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மொத்தமாக கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து மார்ச் இறுதிக்குள் சுமார் 8 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டுக்கு வரும் எனவும் அனிதா ஆனந்த தெரிவித்தார்.
தடுப்பூசி பெறுவதற்கான ஒப்பந்தங்களின் அடிப்படையில் 36.5 மில்லியன் தடுப்பூசிகளை ஜூன் இறுதிக்குள் கனடா பெற்றுக்கொள்ளும்.
அத்துடன் அனைத்துக் கனேடியர்களும் செப்ரெம்பர் இறுதிக்குள் தடுப்பூசி போட முடியும் எனவும் கனேடிய கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா