பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 200 பில்லியன் டொலர்களாக சீனா அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 6.6 வீதம் அதிகமாகும்.
சீன பாராளுமன்றில் பிரதமர் லீ கெகியாங் இராணுவ நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.
சீனாவில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு செலவினத்திற்கு அதிக தொகை ஒதுக்கப்படுகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறைக்கு கடந்த ஆண்டில் 721.5 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில் சீனாவின் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட 75 வீதம் குறைவானதாகும்.
அதேசமயம் இந்தியா பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கிய நிதியை விட சீனா ஒதுக்கியுள்ள தொகை மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் முப்படைகளிலும் சுமார் 20 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.