Thursday 25th of April 2024 03:39:47 AM GMT

LANGUAGE - TAMIL
.
யாழ். போதனா ஆய்வுகூட பரிசோதனை: மன்னார், கிளிநொச்சியில் நால்வர் உள்ளிட்ட 07 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். போதனா ஆய்வுகூட பரிசோதனை: மன்னார், கிளிநொச்சியில் நால்வர் உள்ளிட்ட 07 பேருக்கு தொற்றுறுதி!


யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் மன்னார், கிளிநொச்சியில் நால்வர் உள்ளிட்ட ஏழு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் இருந்து பெறப்பட்டிருந்த 437 பேரின் மாதிரிகள் இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவ்வாறு 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். போதானா வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

நாளாந்த ஆய்வுகூட பரிசோதனை முடிவுகள் தொடர்பில் வெளியிடும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கிளிநொச்சி மாவட்டம் - 02

மன்னார் மாவட்டம் - 02

முல்லைத்தீவு மாவட்டம் (தனிமைப்படுத்தல் மையம்) - 03

தொற்றாளர்கள் குறித்த விபரம் விரைவில்.....


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE