கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் இரணை தீவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இன்று காலை 9.30 மணியளவில் இரணைமாதாநகரிலிருந்து புரப்பட்ட அவர்கள் இரணைதீவை சென்றடைந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது மக்கள் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துயதுடன். நாடாளுமன்ற உறு்பபினர்களும் அவர்கள் மத்தியில் கருத்து தெரிவித்திருந்தனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி