யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றுக்குள்ளானவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட அக்கராயன்குளத்தினைச் சேர்ந்த இருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மல்லாவியில் இடம்பெற்ற மரணச் சடங்கில் பங்கேற்ற நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை,
மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற தொடருந்துடன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு தொற்று அறிகுறி காணப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை மன்னார் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வட மாகாணம்