Friday 29th of March 2024 01:36:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
3வது நாளாகத் தொடரும் நல்லடக்கம்: 24 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டன!

3வது நாளாகத் தொடரும் நல்லடக்கம்: 24 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டன!


கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யும் செயற்பாடு இன்று 3ஆவது நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில் 24 ஜனாசாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களில் கடந்த இரண்டு நாட்களில் இருபது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த இரு தினங்களில் கொரோனாவினால் மரணித்தவர்களின் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று மூன்றாவது நாளாகவும் அடக்கம் செய்யப்படும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் சனிக்கிழமை பதினொரு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 02 மணிவரை நான்கு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலையும் ஜனாஸாக்கள் வரவுள்ளதாக கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் மையவாடியில் கடமையாற்றும் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE